குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்

  • குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட படவுள்ளது. 
  • குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மிக சிறப்பான முறையில் 26-ஆம் தேதி  குடியரசு தினவிழாவை  எழுச்சி மிக்க விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ண காகிதங்கள் மற்றும் மலர்களால் பள்ளி வளாகத்தை  அலங்கரிக்க வேண்டும். குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி  சிறப்பாக கொண்டாட வேண்டும். குடியரசு தினவிழாவில் ,கிராமக்கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள்  உள்ளிட்டோரை அழைத்து விழாவில்  கலந்துகொள்ள வைக்க வேண்டும். தேசிய கொடியை காட்சிப்படுத்தும் போதும் சரி , பயன்படுத்தும் போதும் பிளாஸ்டிக் கொடியாக இருக்கக்கூடாது. குறிப்பாக தேசியக்கொடியை தலைக்கீழாகவோ, கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube