மறுவாக்கு எண்ணிக்கை ! அதிமுக எம்எல்ஏ மேல்முறையீடு

ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏ இன்பதுறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2016 தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ,இதில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏ இன்பதுறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.உயர்நீதிமன்றத்தில் இன்பதுரை தாக்கல் செய்த முடிவையடுத்து, அப்பாவு பதிலளிக்க உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வழக்கின் விசாரணையை வழக்கு விசாரணை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.