இலங்கை குண்டுவெடிப்புடன் தொடர்பு!தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் 7 இடங்களில்  சோதனை நடத்தியது.இந்த சோதனை முடிந்த  பின், இலங்கை குண்டுவெடிப்புடன் முகமது அசாருதீன் என்பவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால்  தமிழகத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு,ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.