நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க! இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க!

நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க! இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க!

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் ஒரு சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார்.

இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக்காடாக தான் மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வனிதாவுக்கு, லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம், நான் நியாயமா தானே நடந்தேன் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த கவின், நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க, இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க என்று கூறியுள்ளார். வனிதாவால் இங்கு பேச முடியவில்லை என்றால், திருப்பி அடுத்ததாக பெர்சனலாக எதையாவது இழுத்துட்டு வந்துருவாங்க என்று கூறுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube