மீண்டும் வாக்குப்பதிவு! தமிழகத்தில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில்…

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. நேற்று கோயம்புத்தூரில் இருந்து, பயன்படுத்தப்படாத வாக்கு பெட்டிகள் தேனிக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வழக்கமான ஒன்றுதான். ஒரு வேளை மறு வாக்குப்பதிவு நடைபெற்றால் தேவைபடும் என்பதால், இந்த மற்றம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதனால், எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேர்மையாக தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு தெரிவித்தார்/ அந்த வாக்குச்சாவடிகள், தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடியிலும், தேனியில் 2 வாக்குச்சாவடியிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment