குறைகிறது ரேஷன் அட்டைதாரர்‌களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கும்  மண்ணெண்ணெய் அளவு குறைத்தது வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மாநிலத்தின் மொத்த தேவையில் தற்போது 24 சதவிகித மண்ணெண்ணெய் மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் பொதுவிநியோகதிட்ட  மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

எனவே உணவுப் பொருள் வழங்கல்துறை, அனைத்து மாவட்ட அலுவலர்கல் ,குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைத்து வழங்கப்பட உள்ள மண்ணெண்ணெய் அளவு குறித்து, அனைவரும் அறியும்படி, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விளம்பரப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால்  தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கும் மண்ணெண்ணையின் அளவு குறைத்தது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.