19 பந்தில் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்..!

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் , ஸ்மித் உடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர்.

சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 19 பந்தில் அரைசதம் விளாசினார். தற்போது ராஜஸ்தான் அணி 11 ஓவர் முடிவில் 130 ரன்கள் எடுத்துள்ளனர். அதில், சஞ்சு சாம்சன் 74 ரன்னுடனும் , ஸ்மித் 48 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

author avatar
murugan