சசிகலா தொடர்பான வசனத்தை நீக்க தயார் -தர்பார் படக்குழு அறிவிப்பு.!

சசிகலா தொடர்பான வசனத்தை நீக்க தயார் -தர்பார் படக்குழு அறிவிப்பு.!

  • ரஜினி நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தில் சசிகலா மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்த வசனத்தை நீக்க தயார் லைகா நிறுவனம் கூறியுள்ளது.
  • தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையிலோ, எந்த நபரையும் புண்படுத்தும் வகையிலோ வசனம் எழுதப்படவில்லை கூறியுள்ளது.

ரஜினி நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தில் சசிகலா மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்த வசனத்தை நீக்க தயார் லைகா நிறுவனம் கூறியுள்ளது. தர்பார் திரைப்படத்தில் “காசு இருந்தால் ஜெயிலில் ஷாப்பிங் போகலாம்” என்ற வசனம் தர்பார் படத்தில் இடம்பெற்று இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதை அடுத்து  லைகா நிறுவனம் இது குறித்து கூறுகையில் , தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையிலோ, எந்த நபரையும் புண்படுத்தும் வகையிலோ வசனம் எழுதப்படவில்லை எனவும் ,சில வார்த்தைகளை சிலரது மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அது நீக்கப்படும் என கூறியுள்ளது.

இந்நிலையில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சை வசனத்தை தர்பார் திரைப்படத்தில் இருந்து நீக்க தயார் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube