வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக உள்ளேன் : நடிகை ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.’ என்று கூறியுள்ளார். தற்போது இவருக்கு பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.