இன்றைய(15.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

பஞ்சாங்கம்

இன்று (15.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், பங்குனி2-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30   மாலை 3.30 – 4.30 ராகு காலம் 4.30 -6.00 எம கண்டம்12.00 – 1.00குளிகை 3.00 – 4.30 திதி ஷப்தமி  நட்சத்திரம் அனுஷம் சந்திராஷ்டமம் அசுபதி யோகம்: மரண யோகம் சூலம்: மேற்கு  பரிகாரம்: வெல்லம் விசேஷம்:  ஷஷ்டி, இன்று கண்ணூறு கழித்தல்  நன்று.ஆரோக்கிய ஸ்னாம் செய்ய நன்று.

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: அருகில் இருப்பவர்களை அனுசரித்து சென்று காரியத்தை சாதிப்பீர்கள்.வாக்கு கொடுக்கும் போது யோசித்து செயல்படுவீர்கள்  வீணான குழப்பம் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் அக்கறை  தேவை.
 
ரிஷபம்: நண்பர்களால் நன்மை கிடைக்கும். வெளி நாட்டுத் தொடர்பு  நலம் அளிக்கும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி பெறும். உடன்பிறப்புகளின் திருமண வாய்ப்புக் கைகூடும்.
 
மிதுனம்:  காலை நேரத்திலேயே காதிற்கு இனிய செய்தி வந்து சேரும் நாள். ஆரோக்கியம் சீராகும். வீட்டுப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
 
கடகம்: சந்தோ‌ஷம் அதிகரிக்கின்ற நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.வாங்கல் மற்றும் கொடுக்கல் ஒழுங்காகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணமானது மேலோங்கும்.
 
சிம்மம்: வயதில் மூத்த மனிதர்களை சந்தித்து மகிழும் நாள். எதிர்கால நலன்கருதி சேமிக்க தொடங்குவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி  செய்வீர்கள்.நல்ல வாய்ப்புகள் தேடி வருகிறது அதை அறிந்து பயன்படுத்தி கொள்வீர்கள்.
 
கன்னி:  அன்பு நண்பர்களின் திடீர் சந்திப்பால் ஆனந்தமானது பெருகும் நாள். இழுபறியாகி வந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தக்கசமயத்தில் ஆதரவுக்கரம் கிடைக்கும்.பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
 

துலாம்:  கடமையே எல்லாம் என்ற உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களை விரைவாக முடிக்கும் நாள்.உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் உங்களை தேடி வரும். பிரபலமான நபர்களின் ஒத்துழைப்பு  மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

விருச்சிகம்: பொதுவாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் நாடி வரும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப்பணியில் ஆர்வமானது அதிகரிக்கும். சகோர/சகோதரிகளுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

தனுசு:  குடும்பத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் சென்று காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் ஏற்படலாம்.

மகரம்: பண வரவு திருப்தி தருகின்ற நாள்.  பாசம்மிக்க பலர் சமயத்தில் நேசக்கரம் நீட்டுவர். திட்டகாரியங்களை திட்டமிட்டவாறு செயல் படுத்துவீர்கள்.வீட்டை விரிவாக்கும் எண்ணம் மேலோங்கும்.

கும்பம்:  சாமர்த்தி பேச்சால் காரியங்களைச் சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்ச்சி காண்பீர்கள். 

மீனம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் அகலும். பூர்வீக சொத்துக்களில்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகள் எல்லாம் இறுதியில் சாதமாக முடிவடையும்.

author avatar
kavitha