ஐடி துறையினர் பிடியில் நடிகை ராஷ்மிகா வீடு…ரெய்டால் பரபரப்பு

  • அதிக ரசிக வட்டாரத்தை கொண்ட நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை
  • முறையாக வரி செலுத்துவதில்லை என்ற புகாரின் பெயரில் நடந்த சோதனையால் பரபரப்பு

கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதற்கு பின் வசூலில் பட்டைய கிளப்பிய கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை அடித்தார். அவ்வாறு அவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் முன்னணி நடிகர்களோடு படங்களில் தற்போது ராஷ்மி நடித்து வருகிறார். இதனால் படம் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் அதனை பணமாக பெற்றுக்கொண்டு அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்று புகார் கூறப்படுகிறது.இந்த புகாரின் அடிப்படையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின்  குடகு மாவட்டத்தில் உள்ள பெங்களூரு வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை காலை 7.30 மணியில் இருந்து ராஷ்மிகா மந்தனா வீட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது.ஆனால் இச்சோதனையின் போது நடிகை ராஷ்மிகா வீட்டில் இருந்தாரா..?என்பது  குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை  இச்செய்தி நடிகை ராஷ்மிகாவின் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
kavitha