ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.மேலும்  அதுவரை ரஞ்சித்தை கைது செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.