ராமேஸ்வரத்தில் வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேர ரோந்து பணியில் கடலோர காவல்பணியினர்!

இலங்கை வழியாக தமிழ்நாட்டினுள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 7000 போலீசார் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக கோயம்புத்தூரில் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புறநகர் பகுதியில் இருந்து கோவை திருப்பூர் செல்லும் பகுதியில் சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் கடல் எல்லை பகுதில் ரோந்து பணியில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் வழக்கத்தை விட அதிகநேரம் இந்த ரோந்து பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாக உள்ளது. கடலோர எல்லை பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.