ராமநாதபுரத்தில் ஆபாச சித்தரிப்புடன் லட்சம் கேட்டு மிரட்டிய மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதள பக்கங்களாகிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் போலி முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து வந்துள்ளனர் சிலர். அந்த புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தற்போதும் மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து திருநெல்வேலியை சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக மேலும் மூன்று பேரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படக்கூடிய பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal