சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் !மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி மறுப்பு

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த  மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்துவிட்டார்.தலைமை நீதிபதி அமர்வை அணுகுமாறு சிதம்பரம் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா.