சித்திரை அமாவாசை முன்னிட்டு..!! ராமேஸ்வரத்திற்கு திரண்ட பக்தர்கள்…!!

நேற்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர் முதலில் தங்கள் முன்னோர்களுக்காக செய்ய வேண்டிய திதி பூஜைகளை செய்தனார்,பின்னர் கடலில் நீராடினர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் பக்தர்களின் நெரிசலை சமளிக்க முடியாமல் போலீசார்  கோவில் ஊழியர்களின் உதவியை நாடினர் கூட்டம் அதிகமாக இருந்ததால்

2 முதல் 6வது தீர்த்தம் முதலானவைகள் மூடப்பட்டது இதனால் 17 தீர்த்தங்கள் மட்டுமே பக்தர்களால் நீராட முடிந்தது பின்னர் சுவாமியையும்,அம்பாளையும் அவர்களுக்கு நடந்த சிறப்பு பூஜைகளையும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment