ராமர் கோவில் பூமி பூஜை! சீதாராம் யெச்சூரி விமர்சனம்

ராமர் கோவில் பூமி பூஜை குறித்து சீதாராம் யெச்சூரி விமர்சனம்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட, பல்வேறு தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,  சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி  அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ஆளுநர், முதல்வர் முன்னிலையில் ராமர் கோவில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது அரசியல் அமைப்பை மீறும் செயல் ஆகும்.   உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது.

மேலும், பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படும் முன்பே,  ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி விட்டது என்றும், இந்த பூமிபூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை நேரடியாகச் சுரண்டும் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது என்றும், அரசியல் சாசனத்தின் எழுத்தையும் உணர்வையும் வெளிப்படையாக மீறும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.