பெண்களை போதை பொருளாக தான் பார்க்கின்றனர் – நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறித்து பேட்டியளித்துள்ளார். 

இவர் அளித்துள்ள பேட்டியில், ‘சமூக வலைத்தளங்களில் சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறித்து கீழ்தரமாகவும், கேவலமாகவும் பேசுகின்றனர். இவை மனதளவில் என்னை மிகவும் பாதித்து உள்ளன. பெண்களை போதை பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், நடிகைகளின் வலைத்தள பக்கத்தில் இதுபோன்ற ஆபாச கருத்துகளை பதிவிடுகிறார்கள். இவர்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் கணக்குகள் தொடங்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். இப்படி செய்தால் தான், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.