மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனுக்கள் மீது பரிசீலனை

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள 6 நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வருகிற 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுவையும் தாக்கல் செய்தனர்.இந்நிலையில் வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.