Breaking:மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.!

தமிழகத்தில் காலியாக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்தமாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மொத்தமாக 17 மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் தமிழகம் , மகாராஷ்டிரா, ஒடிசா ,மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.  திருச்சி சிவா , சசிகலா புஷ்பா,டி .கே ரங்கராஜன், முத்துக்கருப்பன் , செல்வராஜ் ,விஜிலா சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது . இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 06-தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

16-ம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு தாக்கல் திரும்பப்பெற 18-ம் தேதி என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

author avatar
Dinasuvadu desk