பயங்கரவாதத்தின் மூலம் நாட்டைத் துண்டாட..!! நினைக்கிறது பாகிஸ்தான்..!! ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு..!!

பயங்கரவாத இயக்கங்கள் மூலம் இந்தியாவைத் துண்டாட பாகிஸ்தான் சதிசெய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.தாத்ரா நகர் ஹவேலியில் (Dadra Nagar Haveli) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர் உரையாற்றிய ராஜ்நாத்சிங், பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், இதுதொடர்பான சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு என்றேனும் அந்நாடு பணிந்தே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புவதாகவும், பாகிஸ்தான் மட்டும் அதனைப் புரிந்து கொள்ள மறுப்பதாகவும் அவர் கூறினார். பயங்கரவாதத்தின் மூலம் நாட்டைத் துண்டாட நினைக்கும் பாகிஸ்தானின் சதியை, இந்திய ராணுவத்தின் வீரர்கள் எல்லையில் சிறப்பாக செயல்பட்டு முறியடித்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment