முப்படைகளும் தயாராகதான் உள்ளது! சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

சென்னையில் வராஹா ரோந்து கப்பல் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ரோந்து கப்பல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ரோந்துக் கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. இந்த ரோந்து கப்பலை தாய் நாட்டிற்கு அர்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் பால்கோட் பகுதியில் முகாமிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய முப்படைகளும் போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. என குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.