ராஜீவ் கொலை வழக்கு ! தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுல் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.நவம்பர் 5-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.