ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரன் பரோல் நிராகரிப்பு

ராஜீவ்காந்தி கொலைவழக்கில்  சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா மதுரை சிறைத்துறையிடம் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் 30 நாட்கள் பரோல் வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தார்.ஆனால் இவரது கோரிக்கையை மதுரை சிறைத்துறை நிராகரித்துள்ளது.ரவிசந்திரன்  விடுப்பில் தங்க உள்ளதாக கூறிய இடத்தில் பாதுகாப்பு குறைப்பாடு உள்ளதாக குறைபாடு உள்ளதாக  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.