காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்து வருத்தமளிக்கிறது -கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்து வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் .மேலும் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது.ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றினார்  என்று  பேசினார்

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் கருத்து வருத்தமளிக்கிறது.ரஜினியின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு, இலங்கை பிரச்சினை உள்ளிட்ட மற்ற பொது விஷயங்கள் குறித்தும் ரஜினி விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.