மீண்டும் இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்க வீட்டில் இருந்து புறப்பட்ட ரஜினி.!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று  காலை மக்கள் மாவட்ட செயலாளர்களை ஆலோசனை  கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை ரஜினி சந்தித்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினேன்.

கட்சி தொடங்குவது பற்றி ஆலோசித்தோம்.ஆனால் ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் உள்ளது. அதுபற்றி பின்னர் தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் இன்று மீண்டும்  ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.இதற்காக ரஜினி தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

author avatar
murugan