சீன அதிபருடன் விருந்தில் பங்கேற்க ரஜினிக்கு மோடி அழைப்பு…!

நாளை(அக்.11) தமிழகம் வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீன அதிபர் ஜீ ஜின்பஙை கௌரவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சிறப்பு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்தில் தமிழக அரசியல் தலைவர்கள் பலருக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த விருந்தில் பங்கேற்க நடிகர்  ரஜினிகாந்திற்கும் மோடி அழைத்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் சிலர் இதை வதந்தி என்று கூறியுள்ளனர்.

author avatar
Vidhusan