ரஜினிகாந்த் தெரிவித்த ஆன்மிக அரசியலுக்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை!

மதுரை அழகர்கோவிலில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தில் ரசிகர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கடந்த 28-ம் தேதி கிடா வெட்டி விருந்து வைக்க ஆசை என ரஜினி தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக மதுரை அழகர்கோவிலில் ரசிகர் மன்றங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.
அப்போது ரசிகர்களிடையே பேசிய ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தில் அவருக்கு காவலனாக இருப்பேன் எனவும், அவர் தெரிவித்த ஆன்மிக அரசியலுக்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார்…
source: dinasuvadu.com

Leave a Comment