பெரியார் குறித்து ரஜினிக்கு தலையும் தெரியாது,வாலும் தெரியாது-துரைமுருகன்

  • நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
  • பெரியார் பற்றி ரஜினிகாந்துக்கு தலையும் தெரியாது,வாலும் தெரியாது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய  ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

ரஜினிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ரஜினி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.ஆனால் ரஜினி இது குறித்து கூறுகையில்,நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக outlook india என்ற பத்திரிக்கையில் இருந்து இந்த செய்தியை இருந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில் ரஜினி கருத்து குறித்து திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப்பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார்.பெரியார் பற்றி ரஜினிகாந்துக்கு தலையும் தெரியாது, வாலும் தெரியாது என்பதால் ரஜினி பேசாமல் இருப்பது தான் நல்லது என்று தெரிவித்துள்ளார்.