சினிமாவை விட்டு விலக நினைத்த ரஜினி! இழுத்து பிடித்து உச்சநட்சத்திரமாக்கிய கமல்!

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக கருதப்படும் ரஜினியும் கமலும் இன்று கமலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் சிலை திறக்கும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருந்தனர்.
இதில் பேசிய கமல், ரஜினி பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள் ஷூட்டிங்கின் போது ஒரு மரத்தடியில் தங்கள் பாதைகளை பிரித்து கொண்டோம். அதன் படி தற்போது வரை பயணித்து வருகிறோம். ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு விலகி விடுவதாக ரஜினி,தன்னிடம் கூறியதாக கமலே மேடையில் குறிப்பிட்டர்.  பின்னர் கமல், ரஜினியிடம், இந்த இருமுனை போட்டியை ஆரம்பித்துவிட்டு இப்போது சென்றால் என்னையும் ரசிகர்கள் துரத்தி விடுவார்கள். என கூறி, ரஜினியை தொடர்ந்து நடிக்க அழைத்தேன். என கமல் மேடையில் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.