“ஆட்சியை கலைத்தால் தூக்கி போட்டு மிதிப்போம்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம் !

கர்நாடாவை போல தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைத்தால் பந்து மாதிரி தூக்கி போட்டு மிதிப்போம் என்று தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

அப்போது பேசிய, அமைச்சர் அதிமுக மனிதர் ஆரம்பித்த கட்சி இல்லை புனிதர் ஆரம்பித்த கட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும்  அதிமுக 9 இடங்களிலும் வென்றது. 13 என்பது பேய்களின் நம்பர் ஆனால், 9 என்பது நவ ரத்தினங்கள், எனவே  நாங்கள் நவரத்தினங்களை பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தை போல தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விடலாம் என்று ஸ்டாலின் எண்ணினால் அவர்களை பந்து போல தூக்கி போட்டு மிதிப்போம் என்று கூறிய அமைச்சர் திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா நாங்கள் அவர்களை விட மோசமானவர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.