7 பேர் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலை வழக்கில் கைது செய்பட்ட முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

ஆனால் 6 மாத காலமாகியும் இந்த தீர்மானத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆதலால் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, ‘ ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரமும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரமும் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை.’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.