கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட ராஜஸ்தான் எல்லை!

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட ராஜஸ்தான் எல்லை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 

இந்தியாவில், இதுவரை இந்த கொரோனா வைரசால், 276,146 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,750 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில அரசு ஒரு வாரத்திற்கு மாநில எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது. 

மேலும், உரிய காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படும் என்றும், பாஸ் உள்ளவர்கள் மட்டுமே எல்லையை கடக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.