வெட்டுக்கிளி தாக்கியதால் பயிர்கள் பாதிப்பு… கண்டு கொள்ளாத அரசு.. கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் சென்று கோரிக்கை விடுத்த எம்எல்ஏ…

வெட்டுக்கிளி தாக்கியதால் பயிர்கள் பாதிப்பு… கண்டு கொள்ளாத அரசு.. கூடை நிறைய வெட்டுக்கிளியுடன் சென்று கோரிக்கை விடுத்த எம்எல்ஏ…

  • விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி தாக்கி பாதிப்பு.
  • வினோத முறையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ. 

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட்  தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ  வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் ,  ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக ராஜஸ்தானில் ஏராளமான விவசாயிகள் பாதித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியே வெட்டுக்கிளி நிரம்பிய கூடையுடன் வந்துள்ளேன்,’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த வேளாண் துறை அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்குவதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. சுமார் `3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது. சேதமடைந்துள்ள பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube