கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர். இதனையடுத்து, இலங்கை இராணுவம் பள்ளியின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று, இலங்கையில் உள்ள பள்ளிக்கூடங்களில், மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார்.