ராஜகோபால் உடலுக்கு நாளை பிரேத பரிசோதனை நடைபெறும் – காவல்துறை தகவல்!

மாஜிஸ்திரேட் வராததால் ராஜகோபால் உடல் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் சரவணபவன் உரிமையாளரான ராஜகோபால் கடந்த 9 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நல குறைவால் சென்னை ஷ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நீதிமன்ற உத்தரவுக்கு பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இன்று காலை உயிரிழந்தார். உடனடியாக அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மாஜிஸ்திரேட் வராததால் நாளை காலை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.