ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு! 18-ந் தேதி முதல் அமல்

ஆவின் பால்பொருட்கள் மீதான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆவின் பாலின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தற்போது பால்பொருட்கள் மீதான விலையும் உயர உள்ளது.அதன்படி

நெய் 1 லிட்டர் -ரூ.35 உயர்வு

தயிர்  1/2  லிட்டர்-  ரூ.2 உயர்வு

பால் பவுடர் 1 கிலோ -ரூ.50 உயர்வு

பால்கோவா 1 கிலோ -ரூ.20 உயர்வு

பன்னீர் 1 லிட்டர்-ரூ.50 உயர்வு

1/2 கிலோ வெண்ணெய்-ரூ.10 உயர்வு

மேலும்  விலை உயர்வு 18-ஆம்  தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.