ஜில் நியூஸ்: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி,தர்மபுரி, கோவை, திண்டுக்கல் , ஈரோடு கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், மற்றும், வேலூர், திருவண்ணாமலை , விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஓரிரு இடத்தில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.