தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது.வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மழையை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் ஒருசில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது . கோவை, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.