மீட்பு பணிகள் நடைபெறும் இடத்தில் மழை ..! குழி தோண்டும் பணி தொய்வு ..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 71 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ஒரு சுரங்கம் அமைத்து  அதன் மூலம் சுர்ஜித்தை மீட்கும் புதிய திட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் கடினமான பாறைகள் உள்ளதால் துளையிடும்  பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தின் மூலம் பாறைகள் உடைக்க முடியாத நிலையில் போர்வெல் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது போர்வெல் பணிகள் முடிந்தது. இதை தொடர்ந்து மீண்டும் ரிக் இயந்திரத்திம் துளையிட்டு வந்தது.
இந்நிலையில் நடுக்காட்டுபட்டி கிராமத்தில் லேசான மழை பெய்து வருவதால் ரிக் இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது.

author avatar
murugan