தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

  • அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட அதிகமாக 2% சதவிகிதம் மழை பெய்துள்ளதாகக் கூறினார்.
  • தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட அதிகமாக 2% சதவிகிதம் மழை பெய்துள்ளதாகக் கூறினார். சென்னையை பொறுத்தவரை 759 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 633 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளதாகவும் இது 17% சதவிகிதம் குறைவு என்றும் தெரிவித்தார்.

மேலும் வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் அரபிக்கடலில் 3, வங்கக் கடலில் 5 என மொத்தம் 8 புயல்கள் உருவாகியுள்ளன. 1996-க்கு பின்னர் இந்திய பெருங்கடலின் இருமுனைப் பகுதியில் இந்த ஆண்டுதான் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்