பீகாரில் சீமாஞ்சல் ரயில் தடம் புரண்டு 7 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது.
பீகார் மாநிலம் வைஷாலி எனும் இடத்தில் உள்ள சஹதாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் விரைவு ரயில் சென்று கொண்டு இருந்த போது தீடிரென எதிர்பாராத விதமாக ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியாது. இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த எதிர்பாராத விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து எப்படி நடந்தது என காவல்துறை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த ரயில் பெட்டிகளில் தடம் புரண்டதில் பலர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.