ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரிக்கை..!

ரயில்களைக் குறித்த நேரத்தில் இயக்காவிட்டால் மண்டலப் பொதுமேலாளர்களின் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் எச்சரித்துள்ளார்.

ரயில்கள் குறித்த நேரத்தில் சேருமிடத்தை அடையும் விகிதம் 2017-2018 ஆண்டில் 70விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒருமாதக் காலத்துக்குள் ரயில்களைக் குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனியும் பராமரிப்புப் பணிகளைக் காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது என்றும் எவ்வளவு காலதாமதமாக ரயில்கள் இயக்கப்படுகின்றனவோ அவ்வளவுக்கு மண்டலப் பொதுமேலாளர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment