பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக விமர்சித்த வழக்கு! சற்று நேரத்தில் வெளியாகவுள்ள தீர்ப்பு!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில், பிரதமர் மோடியை, ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று  விமர்சித்து பேசியுள்ளார்.
இவரது இந்த பேச்சிற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.