ராகுல் காந்தி இன்று காஷ்மீருக்கு பயணம்

மத்திய அரசு  காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  ஆனால்  காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் கைது  செய்யப்பட்ட விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான் காஷ்மீருக்கு நிலைமையை அறியச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ,கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோரை ஸ்ரீநகரில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தி இன்று காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த  தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேர், காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.