எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து – ராகுல் காந்தி

எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா  இடையே  நீண்ட நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஊடகச் செய்தி அறிக்கை ஒன்றை  பகிர்ந்துள்ளார்.மேலும் அந்த பதிவில்,’தேசப்பற்று இருக்கின்ற லடாக் மக்கள் சீனா ஊடுருவலுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளனர்.இவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்தால் இந்தியாவுக்குத்தான்  அது ஆபத்தாக இருக்கும்.இவர்களின் குரல்களை இந்தியாவிற்காக கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.