தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!

தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!

தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்கி தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்பவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்பவும், தமிழகத்தை  சேர்ந்த அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் உயர் அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக உள்ள கணேசன், சங்கீதா, கிருஸ்துராஜ், பிரிந்தாதேவி மற்றும் அருணா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவை பிறப்பித்து அரசாணையை வெளியிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube