2018ல் சிந்தியாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்த ராகுல் காந்தி.!

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துக்கும், சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சிந்தியா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். பின்னர் இதையடுத்து நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த கையோடு சிந்தியாவுக்கு மாநிலங்களவை சீட்டையும் பாஜக ஒதுக்கியுள்ளது. இதனிடையே 18 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்த சிந்தியா, ராகுல் காந்திக்கு நல்ல நண்பராக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும்  சிந்தியாவின் இந்த திடீர் முடிவு ராகுலை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,  மத்தியப்பிரதேசத்தில் யார் முதல்வர்? என்று கமல்நாத் மற்றும் சிந்தியா இடையே போட்டி நடந்தபோது, இருவரையும் அழைத்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருவருடன் இருக்கும் புகைப்படத்தை ராகுல் பதிவிட்டிருந்தார். தற்போது, சிந்தியா பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி 2018ல் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை ரீ-ட்வீட் செய்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்