மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், தலைவர் பதவியைவிட்டு ராகுல்காந்தி ஓடிவிட்டார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், தலைவர் பதவியைவிட்டு ராகுல்காந்தி ஓடிவிட்டார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நான் பயப்படுவதும், கட்டுப்படுவதும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் தான் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும்.நான் பயப்படுவதும், கட்டுப்படுவதும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் தான்.

ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது. மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், தலைவர் பதவியைவிட்டு ராகுல்காந்தி ஓடிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube