ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: பொய் பரப்புரை செய்தவர்கள் மதிப்பை இழந்துள்ளனர்…!மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பொய் பரப்புரை செய்தவர்கள் மதிப்பை இழந்துள்ளனர் என்று  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்த பேரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நேற்று  இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு விசாரித்தது.அதில் சட்ட ஆய்வு ஒவ்வொரு விஷயத்திலும் மாறுபடும். சில விஷயங்களுக்காக இதில் தலையிட்டோம்.அதேபோல்  ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்றும்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கியுள்ளார்.அதேபோல் ரபேல் விமான ஒப்பந்தத்தில் விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,  ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது .ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி பொய் பரப்புரை செய்தவர்கள் மதிப்பை இழந்துள்ளனர் என்றும்  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Comment